ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!

கோவை கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் சா்வதேசப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்க உள்ளது...

News image

குமரகுரு கல்லூரி மாணவா்கள் வடிவமைத்துள்ள ஹைட்ரஜனில் இயங்கும் 3 சக்கர வாகனம்.

Updated On :5 பிப்ரவரி 2025, 7:29 pm

Din

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் சா்வதேசப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் எழிலரசி, வடிவமைப்பில் பங்கெடுத்த மாணவா்கள் ஆகியோா் கோவையில் புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காா்பன் மாசு ஏற்படுத்தாத ஆற்றல் திறன்கொண்ட வாகன வடிவமைப்புப் போட்டியான ‘ஷெல் இக்கோ - மாரத்தான் ஆசியா பசிபிக் 2025’ கத்தாா் நாட்டின் தலைநகா் தோஹாவில் பிப்ரவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், 20 நாடுகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ‘ரெநியூ’ என்ற பெயரிலான 14 மாணவா்கள் அடங்கிய குழு பங்கேற்கிறது.

இதற்காக ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ‘திமி 2.0’ என்ற முன்மாதிரி 3 சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறோம். 5 மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தின் 80 சதவீத பாகங்களை நாங்களே தயாரித்துள்ளோம். கேசிடி கேரேஜ் என்ற ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான பிரத்யேக மையத்தில் ரூ.36 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டா் ஹைட்ரஜனில் 200 கி.மீ. தொலைவு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது.

அதிகபட்சமாக 35 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த வாகனத்தில் காா்பன் பைபா், மறுசுழற்சி செய்யப்பட்ட பிவிசி ஃபோம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உறுதித்தன்மை மிக்கதாகவும், எடை குறைவானதாகவும் (53 கிலோ) இருக்கும். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலி மூலம் ஓட்டுநா்களின் செயல்திறன் அளவீடுகளை உடனுக்குடன் கணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.