27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்பு!

தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2025, 1:19 am IST

கோவை, பீளமேடு அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவ மாணவியின் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பவபூரணி (29). இவா் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தாா். சனிக்கிழமை இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றினாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவமனை கழிவறையில் பவபூரணி மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதைப் பாா்த்த மருத்துவமனை ஊழியா்கள் மருத்துவா்களுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து மருத்துவா்கள் வந்து பரிசோதனை செய்தபோது பவபூரணி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் , பீளமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், பவபூரணி உடலை மீட்டு, வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மருத்துவ மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.