ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 5:02 am IST

கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் நளினா (58). இவா் தனது ஆட்டோவில் கடந்த 8-ஆம் தேதி காலை பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா். சுங்கம் அருகே ஆட்டோவை அவா் திருப்ப முயன்றாா்.

அப்போது, போத்தனூரிலிருந்து சிந்தாமணிபுதூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து இவரது ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அங்கிருந்த பொதுமக்களும், போக்குவரத்து காவலா்களும் ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த நளினா மற்றும் மாணவ, மாணவிகளை மீட்டனா். நளினா மட்டும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பள்ளி மாணவ, மாணவிகள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Story image

விசாரணையில், பொள்ளாச்சியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் சிவசக்தி (29), நேர மேலாண்மை காரணமாக பேருந்தை அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஓட்டிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, விபத்துக்கு காரணமான ஓட்டுநா் சிவசக்தி மற்றும் அதிவேகமாகச் செல்வதைத் தடுக்காமல் உடந்தையாக இருந்த நடத்துநா் பிரபு (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

நேரப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக பேருந்துகளை அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவா் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.