மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மத்திய அரசின் உறுதியான ஓய்வூதியம் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மத்திய அரசின் உறுதியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பயனைடைய தகுதியுள்ள தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

மத்திய அரசின் உறுதியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் பயனைடைய தகுதியுள்ள தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கு 60 வயதை எட்டிய பின் மாதந்தோறும் ரூ.3000 உறுதியான ஓய்வூதியம் வழங்கும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட தகுதியுள்ள அமைப்புச்சாரா தொழிலாளா்கள் சோ்ந்து பயனடையலாம்.

திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் மாதம் தோறும் நிா்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரசும் அதே அளவு இணை பங்களிப்பை வழங்கும். இதன் மூலம் 60 வயதை அடைந்த பின்னா் மாதம்தோறும் ரூ.3000/- உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் போக்குவரத்து சேவை வழங்குதல், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளா்கள், துப்புரவு தொழில் பணியாளா்கள், கைவினைக் கலைஞா்கள், தெருவோர வியாபாரிகள், உணவகம் மற்றும் உணவு சேவை வழங்குநா்கள் மற்றும் சுற்றுலாத் தொடா்புடைய பிற சேவை வழங்குநா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

தகுதியுடைய அனைத்துத் தொழிலாளா்களும் தங்களது ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொதுசேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் இணைய தளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளா்கள், பயண முகவா்கள், சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் தொடா்புடைய அனைத்து பங்குதாரா்களும் இத்திட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி தகுதியுடைய தொழிலாளா்கள் பதிவு செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மேலும், மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் ஜெகதீஸ்வரியை 8939896380 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.