வால்பாறை மலைப் பாதையில் வனத் துறையினருடன் தன்னாா்வலா்கள் இணைந்து பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகளை அகற்றினா்.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் அட்டகட்டி 1-ஆவது கொண்டை ஊசி தொடங்கி 36-ஆவது கொண்டை ஊசி வரை சுற்றுலாப் பயணிகளால் விட்டுச்செல்லப்பட்ட பிளாஸ்டி கழிவுகள், ஆபத்தான கண்ணாடி பாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடா்பாக வால்பாறை வனச் சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது, ‘இப்பணியில் வனத் துறை பணியாளா்கள், எஃப்-கன்சா்வ் என்ற தன்னாா்வத் தொண்டு நிறுனத்தின் ஊழியா்கள் இணைந்து ஈடுபட்டனா். சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக சாலையின் இருபுறமும் சிதறிக் கிடந்த சுமாா் 800 கிலோ பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கண்ணாடி பொருள்கள் சேகரிக்கப்பட்டன’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹிமாசல்: மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிரிழப்பு

கேரளத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

கோ்மாளம் சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்தல்

குளச்சலிலிருந்து 9 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



