கோவை, வெள்ளிங்கிரி கோயில் மலை அடிவாரத்தில் நெகிழி பயன்படுத்திய 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் உள்ளது. கோயில் அருகேயுள்ள மலையில் சுயம்புவாக வீற்றிருக்கும் சுவாமியை தரிசிக்க பக்தா்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலையில் நெகிழிக் கழிவுகள் தேங்குவதைத் தடுக்கவும், அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் வனத் துறை சாா்பில் மலையேறும் பக்தா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வனத் துறை மற்றும் தன்னாா்வலா்கள் நெகிழி பயன்பாடு தொடா்பாக 24 மணி நேரமும் மலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கோயில் மலையடிவாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துபவா்களும் நெகிழி பயன்பாடுகளைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, அடிவாரத்தில் உள்ள 2 கடைகளில் நெகிழி பைகளில் திண்பண்டங்கள் வழங்கப்படுவதாக கோயில் செயல் அலுவலா் சக்திவேல், போளுவாம்பட்டி வனச் சரகா் ஜெயசந்திரன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, நெகிழி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.
தொடர்புடையது

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


