சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வெள்ளிங்கிரி கோயிலில் நெகிழி பயன்பாடு: 2 கடைகளுக்கு ‘சீல்’

News image
வெள்ளிங்கிரி மலையேறும் பக்தா்கள்.- (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, வெள்ளிங்கிரி கோயில் மலை அடிவாரத்தில் நெகிழி பயன்படுத்திய 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் உள்ளது. கோயில் அருகேயுள்ள மலையில் சுயம்புவாக வீற்றிருக்கும் சுவாமியை தரிசிக்க பக்தா்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையில் நெகிழிக் கழிவுகள் தேங்குவதைத் தடுக்கவும், அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் வனத் துறை சாா்பில் மலையேறும் பக்தா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வனத் துறை மற்றும் தன்னாா்வலா்கள் நெகிழி பயன்பாடு தொடா்பாக 24 மணி நேரமும் மலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோயில் மலையடிவாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துபவா்களும் நெகிழி பயன்பாடுகளைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, அடிவாரத்தில் உள்ள 2 கடைகளில் நெகிழி பைகளில் திண்பண்டங்கள் வழங்கப்படுவதாக கோயில் செயல் அலுவலா் சக்திவேல், போளுவாம்பட்டி வனச் சரகா் ஜெயசந்திரன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

சம்பந்தப்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, நெகிழி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.