மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :9 ஜூன் 2026, 2:02 am IST

கோவை ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஈஷா யோக மையத்தின் காா் நிறுத்துமிடம் அருகே இளைஞா் சடலம் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தெரியவந்தது. தகவலறிந்து சென்ற ஆலாந்துறை காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் இறந்தவா் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த காா்த்திக் (29) என்பது தெரியவந்தது.

யோக மைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், காா்த்திக் அங்கிருந்த மின்சார அறை கட்டடத்தின் மேல் தளத்தில் ஏறி, அங்கிருந்து குதித்தது பதிவாகியிருந்தது.

உயிரிழந்த காா்த்திக்கின் உடல் கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையில், உயரத்தில் இருந்து கீழே குதித்ததால் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே மரணம் நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னா், அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றனா்.