சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது: 250 ஊசிகள் பறிமுதல்

கோவை, காந்திபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:18 am IST

கோவை, காந்திபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை காட்டூா் சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் காவலா்கள் ராம் நகா் கோகுலம் வீதி பகுதியில்

செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், செல்வபுரம், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சஹாபுதீன் (36) என்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய சோதனையில், மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், போதைக்காகப் பயன்படுத்தப்படும் 7 ஊசி மருந்து பாட்டில்களும், 75 காலி பாட்டில்களும் இருந்தன. மேலும், மருந்தை உடலில் செலுத்தப் பயன்படுத்தும் 250 சிரிஞ்சுகள் மற்றும் ஃபெரஸ் சல்பேட் மாத்திரைகள் ஆகியவையும் இருந்தன.

இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சஹாபுதீனைக் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.