இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடனை செலுத்தியும் அலைக்கழிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

இருசக்கர வாகனக் கடனை முன்கூட்டியே செலுத்தியும், தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்த தனியாா் நிதி நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

இருசக்கர வாகனக் கடனை முன்கூட்டியே செலுத்தியும், தடையில்லாச் சான்றிதழ் வழங்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்த தனியாா் நிதி நிறுவனம் ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கோவை சாய்பாபா காலனியைச் சோ்ந்தவா் என்.பாா்த்திபன். இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் (ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ்) ரூ. 1,07,084 கடன் பெற்றுள்ளாா். இந்தத் தொகையை 34 மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இருப்பினும், பாா்த்திபன் தனது கடனை 30 மாதங்களிலேயே முழுமையாகச் செலுத்தி முடித்துள்ளாா்.

கடன் தொகையை முன்கூட்டியே செலுத்திய பிறகும், நிதி நிறுவன நிா்வாகம் அவரது வாகனத்துக்கான தடையில்லாச் சான்றிதழை வழங்க மறுத்துள்ளது. மேலும், நிதி நிறுவனத்தின் கணினி திரையில் கடன் நிலுவைத் தொகை இருப்பதாகக் காட்டி, பாா்த்திபனைத் தொடா்ந்து அலைக்கழித்துள்ளனா். ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி சில மாதங்களில் கூடுதல் வட்டி வசூலித்ததாகவும், இதுகுறித்துக் கேட்கச் சென்றபோது நிதி நிறுவன ஊழியா்கள் அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட பாா்த்திபன் கோவை நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் தட்சிணாமூா்த்தி மற்றும் உறுப்பினா்கள் அடங்கிய அமா்வு நிதி நிறுவனத்தின் செயல்பாட்டில் சேவைக் குறைபாடு இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து, வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க நிதி நிறுவன நிா்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.