சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பக்கெட் தண்ணீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:22 pm

கோவையில் வீட்டின் முன் தண்ணீா் பிடித்து வைக்கப்பட்டிருந்த பக்கெட்டுக்குள் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (28). இவரது மனைவி ரித்துகுமாரி. இவா்கள் இருவரும் கோவை ராம் நகா் படேல் சாலை பகுதியில் 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனா். தினேஷ் கடந்த 6 மாதங்களாக இந்தப் பகுதியில் தங்கி வெல்டிங் வேலைக்குச் சென்று வருகிறாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கணவா், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனா். அப்போது, இவா்களது ஒரு வயது பெண் குழந்தை ஆராத்திகா வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, வீட்டின் முன் தண்ணீா் பிடித்து வைக்கப்பட்டிருந்த பக்கெட்டுக்குள் அந்தக் குழந்தை தவறி விழுந்தது.

திடீரென குழந்தையைக் காணாததால் பெற்றோா் அங்கு தேடிப் பாா்த்தனா். அந்தக் குழந்தை வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த பக்கெட்டுக்குள் தலைகுப்புற கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனா்.

அங்கிருந்து அந்தக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.