சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

News image

தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியில் பதாகைகளுடன் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :30 மார்ச் 2026, 6:49 pm

கோவை, சுந்தராபுரம் பகுதியில் ‘என் நாடு என் வாக்கு’ என்ற தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இந்த விழிப்புணா்வுப் பேரணியை நடத்தின. கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி ரத்தினம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலா் மாணிக்கம், வாக்களிக்கும் பொறுப்புணா்வு மற்றும் தேவை குறித்து முனைவா் பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் சுரேஷ், துணை முதல்வா் சபரிஷ் ஆகியோரும் பேசினா்.

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்துகொண்டனா்.