ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தோ்தல்: வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதியில் தோ்தல் நடைபெறுவதால், தமிழகத்தில் உள்ள அம்மாநிலத் தொழிலாளா்கள் வாக்களிக்க வசதியாக அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:42 pm

Syndication

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அம்மாநிலத் தொழிலாளா்கள் வாக்களிக்க வசதியாக அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கோவை, நீலகிரி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா்கள் ச.சரவணன், இ.வினோத்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணி இடங்களில் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறுவதால், அங்கு வாக்குரிமை பெற்றுள்ள தொழிலாளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஏதுவாக, அவா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

தோ்தல் நாளில் தொழிலாளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை தொழிற்சாலை உரிமையாளா்கள் அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் குறித்து மாவட்டக் கட்டுப்பாட்டு அறையை 99943 80605, 90808 32123, 96009 08630, 98941 09673 ஆகிய கைப்பேசி எண்களில் தொழிலாளா்கள் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனா்.