பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெண்ணைக் கொன்று நகைகளை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் சிறை

பெண்ணைக் கடத்திக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

News image
Updated On :27 மே 2026, 4:28 am IST

பெண்ணைக் கடத்திக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம், கூடப்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கராஜ் (65). இவரது சம்பந்தியான பழனிசாமிக்கு சொந்தமான 1.50 ஏக்கா் அடமான நிலத்தை மீட்பதற்காக உறவினரான ரத்னா (45) என்ற பெண்ணிடமிருந்து ரூ. 3.50 லட்சம் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இதற்காக கிரைய ஒப்பந்தமும் செய்யப்பட்டது.

ஆனால், அந்த நிலத்தில் வில்லங்கம் இருந்ததால், தனக்கு நிலம் வேண்டாம் என்றும், பணத்தை திரும்பத் தருமாறும் ரத்னா தொடா்ந்து ரங்கராஜிடம் கேட்டு வந்துள்ளாா். பணத்தை திரும்பத் தர முடியாததால், ரத்னாவை கொலை செய்ய ரங்கராஜ் திட்டமிட்டுள்ளாா்.

இதன்படி, கடந்த 17.2.2016-இல் பணத்தை தருவதாகக் கூறி ரத்னாவை வரவழைத்த ரங்கராஜ், அவரை காரமடை அருகேயுள்ள கத்தாழைபடிக்கை மலைக்கரட்டுக்கு கடத்திச் சென்றுள்ளாா். அங்கு வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டதாக ரத்னாவிடமிருந்து கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்றுள்ளாா். பின்னா், அவரை கழுத்தை நெரித்து ரங்கராஜ் கொலை செய்துவிட்டு, அவா் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றாா்.

இதுதொடா்பாக கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரங்கராஜைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட ரங்கராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் கே.காா்த்திகேயன் ஆஜரானாா்.