4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பவானி திருவள்ளுவர் நகரில் மேல்நிலை குடிநீர்த் தொட்டி திறப்பு

பவானி நகராட்சி 7-ஆவது வார்டு திருவள்ளுவர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 12:03 am

பவானி நகராட்சி 7-ஆவது வார்டு திருவள்ளுவர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. 
இப் பகுதியில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ரூ.8.50 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். 
நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச்  செயலர் கே.ஆர்.ஜான், முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள்  எம்.ஆர்.துரை,  என்.ராஜேந்திரன், உறுப்பினர்கள் ஏ.முத்துசாமி, மோகன், ராஜேந்திரன், செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.