திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :25 மே 2018, 12:52 am IST

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அங்கு 100 நாள்களுக்கும் மேல் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் மாதையன் தலைமையில் பலர் ஆசிரியர் காலனி பகுதியில் திரண்டனர். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாகச் சென்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கைக வலியுறுத்தி முழக்கமிட்டனர். பெருந்துறை சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.