யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு: சக்தி மசாலா குழுமத்திற்கு விருது

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சிறந்த நிறுவனத்தின் தமிழக அரசு விருதை ஈரோடு சக்தி மசாலா குழுமத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 3:03 pm

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சிறந்த நிறுவனத்தின் தமிழக அரசு விருதை ஈரோடு சக்தி மசாலா குழுமத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

ஈரோடு மாமரத்துபாளையத்தில் சக்தி மசாலா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவன தலைவராக. பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குனராக சாந்தி துரைசாமி செயல்படுகின்றனர். இந்நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு "உங்களால் முடியும். உழைப்புக்கு எதுவும் தடையில்லை" என அவர்களுக்கு வாழ்வியல் நம்பிக்கை கொடுத்து பணிபுரிய வைத்துள்ளார்கள். கடந்த 30 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாற்று திறனாளிகள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 

கரோனா காலத்திலும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பணி புரிகிறார்கள். 

இதற்காக இவர்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது. இந்திய நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு வாய்ந்த, திறமை கொண்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. சக்தி மசாலா நிறுவனத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்கு தொடர்ந்து செயல்படுவதற்கும் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த சிறந்த நிறுவனத்திற்கான தமிழக அரசின் சிறப்பு விருதினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். 

விருதை தலைவர் துரைசாமி, நிர்வாக இயக்குனர் சாந்திதுரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விருது பெற்ற சக்தி மசாலா நிறுவனத்துக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.