குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நிலை தொடரும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நிலை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
Updated On :19 ஆகஸ்ட் 2020, 12:02 pm

DIN

ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நிலை தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கன்னிமார் கரடுப்பகுதியில் ஜி.கே மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு த.மா.க மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு வகையிலான விதைகளை தூவி மரக்கன்றுகளை நட்டினார்.

பின் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கரோனா பாதிப்பு குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குறித்து முதலமைச்சர் தான் அறிவிப்பார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போதைய நிலையே தொடரும்.” என்றார்.

மேலும், “ஒரு விவசாயி முதலமைச்சராக இருப்பதால் தான் விவசாயிகள் நலன் தெரிகிறது. தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது. தற்போதைய ஆட்சியில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூன்றாவது முறையாக நிறைந்துள்ளது. மேட்டூர் அணை 300 நாட்களுக்கு மேல் 100 அடியாக உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பல லட்சம் மரக்கன்றுகளை நட்டார். அவர் வழியில் நடைபெறும் தற்போதைய ஆட்சியில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.” என்றார்.

விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி ராமலிங்கம். தென்னரசு, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், விடியல் சேகர், வேளாளர் மகளிர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வரதராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.