யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் 330 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 330 பேருக்கு தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 12:36 pm

DIN

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 330 பேருக்கு தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

தமிழக அரசின் சார்பில் ஆதரவற்றவர்கள், முதியோர்களுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில், 330 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான உதவித்தொகை  ஆணை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, ஈரோடு தாசில்தார் பரிமளா தேவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உமாமகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினார். கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினர்.

விழாவில் மாவட்ட கூட்டுறவு வங்கி துணை தலைவர் கேசவமூர்த்தி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், பகுதி செயலாளர் தங்கமுத்து, கோவிந்தராஜ், ராமசாமி, ஒன்றியச் செயலாளர் பூவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.