குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானியில் போக்குவரத்துக்கழக தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் போக்குவரத்து கழக தொழில்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழில்சங்க நிர்வாகிகள்.
Updated On :25 ஆகஸ்ட் 2020, 8:36 am

DIN

தமிழக அரசு பேருந்து போக்குவரத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் உடனே இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் போக்குவரத்து கழக தொழில்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சிகோட்டையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.எஸ்.தங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பி.மகேந்திரன், மத்திய சங்க துணைச் செயலாளர் எஸ்.இளங்கோவன், ஐஎன்டியூசி கிளைத் தலைவர் பி.முருகன், ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கத்தின் துணை செயலாளர் எஸ்.ஏ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288 ஏ-வைக் கைவிட வேண்டும். தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்தைப் பாதுகாப்பு அம்சங்களுடன் உடனே இயக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், பிடித்தம் செய்த சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

டி.ஏ. அரியர்ஸ் உள்ளிட்ட பணப் பாக்கியினை உடனே வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப் அனைத்து தொழில்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.