குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு கனிராவுத்தர் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
Updated On :31 ஆகஸ்ட் 2020, 1:15 pm

DIN

ஈரோட்டில் கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மீட்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கனிராவுத்தர்குளத்தின் கரையில், குளத்தின் மீட்பு குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமை தாங்கினார்.

இதில், குளத்தின் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிய பின்னரே தற்போது நடந்து வரும் திட்டப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளர் லுக்மான், ஆதித்தமிழர் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் நிலவன் கூறியதாவது, “கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நீர்பிடிப்பு பகுதி சுருங்கி விட்டது. குளத்தின் கரையை ஆக்கிரமித்து கட்டடம் உள்ளது. இந்த கட்டடமும் நீர்பிடிப்பு பகுதியில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மறுக்கின்றனர். எனவே, குளத்தின் வெளியேயும், உள்ளேயும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி விட்டு, தற்போது நடந்து வரும் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.