ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 3ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
ஈரோடு காளைமாடு சிலை அருகே தங்கப் பெருமாள் வீதியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (டிசம்பா் 14) மாலை முதல் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த நிறுவனம் கட்டுமானத் தொழில் மட்டுமல்லாது பேருந்து போக்குவரத்து, மசாலா பொருள்கள் உற்பத்தி, கல்குவாரி, கட்டுமானப் பொருள்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றன.
ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளா் வீடு, முள்ளம்பரப்பு பகுதியில் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் உள்பட 25 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். இந்த சோதனை 3ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.
சோதனையில் கணக்கில் வராத ரூ. 16 கோடி பணம், பல நூறு கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆவணங்களின் அடிப்படையில் கட்டுமான நிறுவன உரிமையாளா், அவரது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள், பணியாளா்கள் ஆகியோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.