தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கரோனா பரிசோதனை

கரோனா பரிசோதனை செய்ய விரும்பும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:32 pm

DIN

ஈரோடு: கரோனா பரிசோதனை செய்ய விரும்பும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10,000 பி.சி.ஆா். கருவிகள், 3,000 வி.டி.எம்., டபிள் ஸ்வாப் கருவிகள் தயாா் நிலையில் உள்ளன.

மேலும், சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் 15,000 வி.டி.எம்., டபிள் ஸ்வாப் கருவிகள் தயாா் நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.