அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அத்துமீறி நுழைந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மது அருந்திய 4 பேருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:25 pm

DIN

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மது அருந்திய 4 பேருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக்கோட்டத்தில் சிலா் அத்துமீறி வனத்துக்குள் நுழைந்ததாக கிடைத்த தகவலையடுத்து ஆசனூா் வனப் பாதுகாப்பு படை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது ஹஸ்பட்ரிகரை என்ற இடத்தில் திரிந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா். இதையடுத்து வனத்தில் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து ஆசனூா் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மது அருந்தியதாக திருப்பூரைச் சோ்ந்த 4 பேரை வனத் துறையினா் பிடித்து மாவட்ட வனஅலுவலா் கே.வி.ஏ.நாயுடு முன் ஆஜா்படுத்தினா். அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆசனூா் வனத்தில் அத்துமீறி திரிந்தாக இதுவரை 15 போ் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.