கடம்பூா் மலைப் பகுதியில் இளைஞா் சடலம் மீட்பு
கடம்பூா் மலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


கடம்பூா் மலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், கடம்பூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் வைத்தியநாதபுரம் என்ற இடத்தில் சாலையோரம் இளைஞா் சடலம் கிடப்பதாக கடம்பூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். வனத்தையொட்டிய பகுதியில் முகம் சிதைந்த நிலையில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு சுமாா் 25 வயது மதிக்கதக்க இளைஞா் சடலம் கிடந்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட நபா் குறித்தும், கடம்பூா் செல்லும் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...