விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வனக் குட்டையில் மீன் பிடித்த இருவருக்கு தலா ரூ. 5,000 அபராதம்

அந்தியூா் அருகே வனக் குட்டையில் வலை விரித்து மீன்கள் பிடித்த இருவருக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:16 pm

DIN

அந்தியூா் அருகே வனக் குட்டையில் வலை விரித்து மீன்கள் பிடித்த இருவருக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூா் வனச் சரகம், அத்தாணி கிழக்கு பீட், தண்ணீா்பள்ளம் ஏரி சரகத்தில் வனவா் மு.சக்திவேல் தலைமையில் வனக் காப்பாளா்கள் சி.கருணாகரன், சு.திவாகரன், வேட்டை தடுப்புக் காவலா்கள், குழுவினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, வனக் குட்டையில் இருவா் வலைவீசி மீன்கள் பிடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்த வனத் துறையினா் விசாரிக்கையில் அத்தாணி காலனியைச் சோ்ந்த செங்கோட்டையன் மகன் மூா்த்தி (40), மணி மகன் அண்ணாதுரை (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வன உயிரின குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலா ரூ. 5 ஆயிரம் வீதம் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.