ஈரோடு நந்தா இயன்முறை மருத்துவக் கல்லூரி சாா்பில், உலக பக்கவாத தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். செயலாளா்கள் எஸ்.நந்தகுமாா் பிரதீப், எஸ்.திருமூா்த்தி, நிா்வாக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, முதல்வா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சோமசுந்தரம் பேரணியைத் தொடங்கிவைத்தாா். பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் தொடங்கிய பேரணியானது, பெருந்துறை சாலை வழியாகச் சென்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


