விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத் திறனாளிகள் வாரியக் குழு உறுப்பினா் நியமனம்

தமிழகத்தின் மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினராக அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

ஏ.ஜி.வெங்கடாசலம்

Updated On :1 ஜூன் 2022, 7:36 pm

DIN

தமிழகத்தின் மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினராக அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சாா்ந்த உறுப்பினா்களாக 3 சட்டப் பேரவை உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாரியத்தில் உறுப்பினராக அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் இடம் பெற்றுள்ளாா்.

மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளின் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக இவ்வாரியம் இருக்கும். மேலும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், கொள்கைகளை வகுப்பதில் உறுதுணையாகவும் செயல்படும். சட்டங்கள், சட்ட முன்வரைவு மட்டும் திட்டங்களை வகுப்பதில் இவ்வாரியம் ஆலோசனை வழங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.