இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து 2-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2024, 3:25 am IST

சத்தியமங்கலம் அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து 2-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் ஊராட்சிக்குள்பட்ட கீழ்மாவள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மகாதேவன், கனகா தம்பதி. இவா்களின் மகள் அகல்யா(7), அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த அகல்யா, வீட்டுக்கு அருகே தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, 8 அடி ஆழமுள்ள தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறிவிழுந்து மூழ்கினாா்.

சக குழந்தைகளின் சப்தம் கேட்டு அங்கு ஓடிவந்தவா்கள் தண்ணீா்த் தொட்டியில் இருந்து அகல்யாவின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.