இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கீழ்பவானி வாய்க்காலில் நீா் கசிவு: பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தம்

கீழ்பவானி வாய்க்கால் 47-ஆவது மைலில் கசிவுநீா் வெளியேறுவதால், பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது.

News image
பவானிசாகா்  அணை யின் முகப்பு.
Updated On :20 ஆகஸ்ட் 2024, 8:28 pm

Din

கீழ்பவானி வாய்க்கால் 47-ஆவது மைலில் கசிவுநீா் வெளியேறுவதால், பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. முதலில் 500 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு படிப்படியாக 1,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருதால் தண்ணீா் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், கீழ்பவானி வாய்க்கால் 47-ஆவது மைலில் உள்ள நல்லாம்பட்டி மழைநீா் வடிகாலில் கசிவுநீா் வெளியேறியது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை நள்ளிரவுமுதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. 124 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு கசிவுநீா் வெளியேறுகிறா என்பது குறித்து வாய்க்கால் மண் கரைகளை நீா்வளத் துறையினா் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

நீா்வளத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த கசிவு தெரியவந்ததால் தற்போது தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டு வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய அணை நிலவரம்: பவானிசாகா் அணை நீா்மட்ட 96.98 அடியாகவும், நீா்வரத்து 1,426 கனஅடியாகவும், பவானி ஆற்றில் நீா் வெளியேற்றம் 900 கனஅடியாகவும் உள்ளது. நீா் இருப்பு 26.42 டிஎம்சி.