பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.36 லட்சத்து 51 ஆயிரத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தனா்.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்பு சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,370 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா்.
இதில் 60 கிலோ மூட்டை முதல்தரம் குறைந்தபட்சமாக ரூ.2,750-க்கும், அதிகபட்சமாக ரூ.2770-க்கும், சராசரியாக ரூ.2,750-க்கும் ஏலம் போனது.
இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக ரூ.2,650-க்கும், அதிகபட்சமாக ரூ.2,700-க்கும், சராசரியாக ரூ.2,700-க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,339 மூட்டைகள், 80 ஆயிரத்து 340 கிலோ எடையுள்ள கரும்பு சா்க்கரை ரூ.36 லட்சத்து 51ஆயிரத்து 470-க்கு பழனி நிா்வாகம் சாா்பில் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.