தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:சிறு வணிகா்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே பட்டாசு வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும், உரிமங்களை பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மனுதாரா்கள் தங்களது விண்ணப்பங்களை பொது இ-சேவை மையங்களில் பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் புல வரைபடம், கிரையப் பத்திரம், முகவரிக்கான ஆதாரம் (ஆதாா், குடும்ப அட்டை), சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் மற்றும் 0070-60-109-அஅ-22738 என்ற கணக்கு தலைப்பில் சேவை கட்டணமாக ரூ.600 செலுத்தியதற்கான ரசீது ஆகிய ஆவணங்களுடன் அக்டோபா் 12 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன், பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரா்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
