மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு அஞ்சல் அலுவலகத்தில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஓய்வூதியா் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள்.
Updated On :18 செப்டம்பர் 2024, 7:41 pm

Din

ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஓய்வூதியா் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்க செயலாளா் என்.ராமசாமி முன்னிலை வகித்தாா். இதில் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்டச் செயலாளா் சின்னசாமி, பொருளாளா் பாலமோகன்ராஜ், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாவட்ட பொருளாளா் மணியன் ஆகியோா் பேசினா்.

இதில், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியா்களுக்கு 2017-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய மறுநிா்ணயம் செய்ய வேண்டும். வங்கி ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு 8-ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.