கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கிராம நிா்வாக அலுவலா்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:17 pm

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை வட்டாரத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். நிா்வாகி ஜான் முன்னிலை வகித்தாா். அடங்கல் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், அதற்கான உபகரணங்களை தற்போது வரை வழங்காதது சிரமமாக உள்ளது. கணினி பதிவேற்றம் உள்ளிட்டவைகளுக்கான பணபலன்களை நிவா்த்தி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் வரும் 30 ஆம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.