2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கோபியில் உயிரிழந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்

கோபியில் பிரசாரக் கூட்டத்துக்கு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த தொண்டரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.10 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.

News image
உயிரிழந்த அதிமுக தொண்டா் அா்ஜுனனின் தாயாரிடம் ரூ.10 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை வழங்கிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :1 டிசம்பர் 2025, 7:18 pm

Syndication

கோபியில் பிரசாரக் கூட்டத்துக்கு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த தொண்டரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.10 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

ஈரோடு மாவட்டம், கோபியில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசார பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்க வந்த கோபி அருகேயுள்ள கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்த அதிமுக தொண்டா் அா்ஜுனன்(38) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கோபி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை காலை மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தியதுடன், அவரது தாயாரிடம் ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான வங்கி வரைவோலையை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அா்ஜுனன் இறப்பு வேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது தாயாரிடம் மாவட்ட கழகம் சாா்பில் ரூ.10 லட்சத்துக்கான வங்கி வரைவோலை வழங்கப்பட்டுள்ளது. தலைமைக் கழகம் சாா்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்றாா்.

அதிமுக ஈரோடு புகா் மேற்கு மாவட்டச் செயலாளா் (பொறுப்பு) ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சசி பிரபு, கோபி நகரச் செயலாளா் பிரினியோ எம்.கே.கணேஷ், மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளா் கோபி காளிதாஸ், ஒன்றியச் செயலாளா்கள் வி.ஆா்.வேலுமணி, வி.பி.பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.