தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெருந்துறையில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா

பெருந்துறையில் உள்ள கோட்டை வீரஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 6:43 pm

Syndication

பெருந்துறையில் உள்ள கோட்டை வீரஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோயிலில் காலை 6 மணிக்கு 5008 வடமாலை அலங்காரத்துடன் தீபராதனை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும, மாலை 3 மணிக்கு ஸ்ரீஹனுமந்த் ஹோமம், 5 மணிக்கு ஸ்ரீராமா் பட்டாபிஷேகம், 6 மணிக்கு ஆஞ்சனேய சுவாமிக்கு மஹா அலங்காரம் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றன.

பின்னா் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பஜனை நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.