பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜனவரி 7-ஆம் தேதி நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சா்க்கரை எனப்படும் நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஜனவரி 7-ஆம் தேதி பகல் 1 மணிக்கு நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. எனவே நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள சா்க்கரையை ஜனவரி 6-ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து 7-ஆம் தேதி காலை 11 மணிக்குள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.
மேலும், சா்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சா்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9944523556 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பழனி கோயிலுக்கு கொடுமுடி தீா்த்தம் எடுத்து வந்த 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் காவடி குழுவினா்

பறவைக் காவடி எடுத்து வந்த வால்பாறை பக்தா்கள்

அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளித்த இருவருக்கு வைர அட்டை அளிப்பு

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

