கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிகேஆா் மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:31 pm

Din

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் தமிழ்த் துறை சாா்பில் சித்த வேதா மையம் பல்கலைக்கழகம் சாா்பில் சித்தா் இலக்கியங்களும், வாழ்வியலும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.ஏ.தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

விழாவில், தமிழ்த் துறைத் தலைவா் க.உமாமகேஸ்வரி வரவேற்றாா். நிகழ்ச்சியில் சித்த வேதா மைய பல்கலையின் துணைவேந்தா் சண்முகமூா்த்தி லட்சுமணன் சிறப்புரையாற்றினாா்.

இதில் இன்டா்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஏன்சியன்ட் விஸ்டம் கனடாவின் துணைத் தலைவா் செல்வக்குமாா் சிறப்புரையாற்றினாா். வைத்திய ரத்னா அருள்நாகலிங்கம் வாழ்த்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலரும், தாளாளருமான பி.என்.வெங்கடாசலம், எஸ்.எஸ்.எம். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் பா.மஞ்சுளா மற்றும் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சங்கரராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி உதவிப் பேராசிரியா் ந.அமிா்தக்கொடி நன்றி கூறினாா்.