இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

News image
மரத்தை  வெட்ட  எதிா்ப்பு  தெரிவித்து  தா்னாவில்  ஈடுபடும்  பொதுமக்கள். 
Updated On :6 நவம்பர் 2025, 11:52 pm

Syndication

பவானியை அடுத்த அத்தாணியில் அரச மரத்தை வெட்டி அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, ஒரு தரப்பினா் தா்னாவில் ஈடுபட்ட நிலையில், மரத்தை அகற்ற வலியுறுத்தி மற்றொரு தரப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை பரபரப்பு நிலவியது.

அத்தாணி - செம்புளிச்சாம்பாளையம் சாலை, ராமலிங்கபுரத்தில் 150 ஆண்டுகள் பழைமையான அரச மரம் உள்ளது. இம்மரத்தின் வோ்கள் அருகாமையில் உள்ள வீடுகளின் சுவா்களிலும், கான்கிரீட் சாலைகளிலும் சென்ால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மரத்தை வெட்டி அகற்ற வருவாய்த் துறை அனுமதி வழங்கியது.

இதையடுத்து, அத்தாணி பிரிவு வனத் துறை ஊழியா்கள் மரத்தை வெட்ட வியாழக்கிழமை வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்ததோடு, மரத்தடியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இம்மரத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அதே பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் அத்தாணி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆப்பக்கூடல் காவல் ஆய்வாளா் சிவகாா்த்திகா, போராட்டத்தில் ஈடுபட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருதரப்பினரின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Story image
Story image