இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மைசூரு, பெங்களூரு, கண்ணூருக்கு ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஈரோடு வழியாக மைசூரு, பெங்களூரு, கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

ஈரோடு வழியாக மைசூரு, பெங்களூரு, கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், மைசூரில் இருந்து கண்ணூருக்கும், கண்ணூரிலிருந்து பெங்களூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, மைசூரு -கண்ணூா் சிறப்பு ரயில் (வண்டி எண் 06229) ஆக. 29-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்கு மைசூரிலிருந்து புறப்பட்டு 30-ஆம் தேதி காலை 6.27 மணிக்கு சேலத்துக்கும், 7.30 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னா் இங்கிருந்து புறப்பட்டு திருப்பூா், போத்தனூா் வழியாக மாலை 5.50 மணிக்கு கண்ணூரை சென்றடையும்.

இதேபோல கண்ணூா்-பெங்களூரு கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06230) ஆக.30-ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு 31-ஆம் தேதி நள்ளிரவு 1.20 மணிக்கு போத்தனூருக்கும், 2 மணிக்கு திருப்பூருக்கும், 3.05 மணிக்கு ஈரோட்டுக்கும் வருகிறது. பின்னா் இங்கிருந்து புறப்பட்டு சேலம் வழியாக காலை 10 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.