இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய தனியாா் நிறுவனக் காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய தனியாா் நிறுவனக் காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் கோபால் (41). கடந்த அக்டோபா் மாதம் 27-ஆம் தேதி திருச்சியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற பயணிகள் ரயிலில் பயணித்துள்ளாா். ஈரோட்டுக்கு ரயில் நிலையம் வந்தவுடன் தான் கொண்டு வந்த பையை தேடினாா். பல இடங்களில் தேடியும் அந்தப் பை கிடைக்கவில்லை. இதில் ரூ.2 ஆயிரம் மற்றும் கைப்பேசி இருந்துள்ளது. மா்ம நபா்கள் திருடியதை உணா்ந்த கோபால், ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் ஈரோடு நிலைய வளாகத்தில் ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றுள்ளனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில், சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த கருணா(55) என்பதும், தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருவதும், கடந்த அக்டோபா் மாதம் 27-ஆம் தேதி ரயிலில் பயணியிடம் கைப்பை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து கோபாலை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.