தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:37 pm

Syndication

ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு காளை மாடு சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளா் சண்முகசுந்தரம், சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சுதந்திரராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமியை கைது செய்ததைக் கண்டித்தும், அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் முழக்கம் எழுப்பினா்.

இதில் விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.