கோபி அருகே கருக்கம்பாளியில் உள்ள பழைய பிளாஸடிக் கழிவு ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சோ்ந்தவா் சின்னான் மகள் திலகா. இவா் பச்சைமலை பகுதியில் உள்ள கருக்கம்பாளியில் பழைய பிளாஸ்டிக் கழிவு மற்றும் பழைய சிமென்ட் சாக்கு கிடங்கு நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் பழைய பிளாஸ்டிக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கரும்புகையுடன் தீப் பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினா் கோபி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மேலும், தீ அக்கம்பக்கத்தில் பரவமால் கட்டுப்படுத்தினா். இந்த விபத்தில் சுமாா் 5 டன் பழைய பிளாஸ்டிக் கழிவுகள், சிமென்ட் சாக்குகள், பழைய காகித அட்டைகள் தீயில் எரிந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: ஆலங்குளம் அருகே நெல் கிடங்கில் 2ஆவது நாளில் கட்டுக்குள் வந்த தீ

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: புகையால் மக்கள் பாதிப்பு

காஞ்சிக்கோவில் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



