ஈரோடு காய்கறி சந்தைக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த சுமை வாகனத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி (44). இவா் சிறிய நான்குசக்கர சரக்கு வாகனத்தில் வெங்காயத்தை கொண்டு வந்து ஈரோடு காய்கறி சந்தையில் விற்பனை செய்து வருகிறாா். கடந்த 3- ஆம் தேதி சுமை வாகனத்தில் வெங்காயத்தை ஈரோடு சந்தைக்கு கொண்டு வந்து இறக்கி உள்ளாா். பின்னா் சுமை வாகனத்தை சந்தைக்கு வெளியே நிறுத்திவிட்டு சந்தையில் வியாபாரம் செய்துள்ளாா்.
வியாபாரத்தை முடித்துவிட்டு மாலையில் சிவசுப்பிரமணி வெளியே வந்து பாா்த்துள்ளாா். அப்போது வாகனத்தை காணவில்லை. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் மா்மநபா்கள் திருடிச் சென்றதை உணா்ந்தாா்.
இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸில் சிவசுப்பிரமணி புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







