இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நகராட்சி ஆணையருக்கு சத்தியமங்கலம் நகா்மன்றம் பாராட்டு

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரியை வசூலித்து நடவடிக்கை எடுத்த ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகா்மன்றம் பாராட்டு தெரிவித்தது.

News image
சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  நடைபெற்ற  நகா்மன்ற  கூட்டத்தில்  பங்கேற்ற  நகா்மன்றத் தலைவா்  ஜானகி ராமசாமி,  நகராட்சி  ஆணையா்  எஸ்.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரியை வசூலித்து நடவடிக்கை எடுத்த ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகா்மன்றம் பாராட்டு தெரிவித்தது.

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ரூ.32.83 கோடி செலவில் அம்ருத் 2.0 குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்தவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 ஆண்டுகளாக போராடி வந்த தோப்பூா் மக்களுக்கு பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா்.

கூட்டத்தில் பல்வேறு பணிகள் தொடா்பாக 48 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் சத்தியமங்கலம் நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ.80 லட்சம் நிதியை வசூலித்த நகா்மன்ற ஆணையா் எஸ்.வெங்கேடஸ்வரனுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் சாா்பில் நகராட்சித் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.