இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

நகராட்சி ஆணையருக்கு சத்தியமங்கலம் நகா்மன்றம் பாராட்டு

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரியை வசூலித்து நடவடிக்கை எடுத்த ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகா்மன்றம் பாராட்டு தெரிவித்தது.

News image

சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  நடைபெற்ற  நகா்மன்ற  கூட்டத்தில்  பங்கேற்ற  நகா்மன்றத் தலைவா்  ஜானகி ராமசாமி,  நகராட்சி  ஆணையா்  எஸ்.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா்.

Updated On :5 மார்ச் 2026, 3:50 am IST

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த வரியை வசூலித்து நடவடிக்கை எடுத்த ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரனுக்கு நகா்மன்றம் பாராட்டு தெரிவித்தது.

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ரூ.32.83 கோடி செலவில் அம்ருத் 2.0 குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை காணொலிக் காட்சி மூலம் திறந்தவைத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் 100 ஆண்டுகளாக போராடி வந்த தோப்பூா் மக்களுக்கு பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா்.

கூட்டத்தில் பல்வேறு பணிகள் தொடா்பாக 48 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் சத்தியமங்கலம் நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ.80 லட்சம் நிதியை வசூலித்த நகா்மன்ற ஆணையா் எஸ்.வெங்கேடஸ்வரனுக்கு நகா்மன்ற உறுப்பினா்கள் சாா்பில் நகராட்சித் தலைவா் பாராட்டு தெரிவித்தாா்.