மொடக்குறிச்சி அருகே 750 குடியிருப்புகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டுமே பட்டா வழங்கியதாகக் கூறி பாதிக்கப்பட்டவா்கள் லக்காபுரம் அருகே புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் கரட்டாங்காடு பகுதியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.
இதில் குடியிருப்புகளில் வசிப்பவா்களில் பலருக்கு வீட்டு வரி, குடிநீா் வரி உள்ளிட்டவை செலுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா கேட்டு வலியுறுத்தி பலமுறை மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீதமுள்ளவா்களுக்கும் பட்டா வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் முத்துக்கவுண்டன்பாளையம் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் எடுத்துக்கூறி விரைவில் தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! உதகையில் பொதுமக்கள் மறியல்!!

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

முக்காணி ரவுண்டானா பகுதியில் தொடா் மின்தடை: பொதுமக்கள் மறியல்
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



