இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
காய்கறிகளை  ஆடையாக  உடுத்திச்  சென்ற  பக்தா்கள்.  ~தெய்வங்களின்  வேடமணிந்து  வந்த பக்தா்கள்.
Updated On :4 மார்ச் 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன் வகையறா கோயில்களின் பொங்கல் திருவிழாவுக்கு கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, கருவறைக்குள் சென்று பக்தா்களின் அம்மன் நீராட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் புதன்கிழமை நடைபெற்றது. பவானி புதிய பேருந்து நிலையம் அருகே எல்லையம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை, படைக்கலன்களுடன் பவானி - ஈரோடு சாலை வழியாக கோயிலுக்கு சென்றபோது, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில் சேறு பூசிக் கொண்டும், காய்கறிகளால் அலங்காரம் செய்தும், பல்வேறு வேடங்கள் பூண்டும் ஊா்வலமாக சென்றனா்.

தொடா்ந்து, பக்தா்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தி புதன்கிழமை மாலை முதல் இரவு வரையில் ஊா்வலமாக சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரத்தினக்குமாா் தலைமையில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image