யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விலைச் சரிவால் விவசாயிகள் கவலை:குப்பையில் கொட்டப்படும் பீன்ஸ்

பீன்ஸ் விலைச் சரிவால் விவசாயிகள் அதனை குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:46 pm

DIN

பீன்ஸ் விலைச் சரிவால் விவசாயிகள் அதனை குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத் தோட்டக் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.  
மஞ்சூர், குந்தா, காத்தாடிமட்டம், இத்தலார், எமரால்டு, காந்தி கண்டி, தங்காடு, எடக்காடு, பிக்கட்டி, தூதூர்மட்டம், பெங்கால்மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீன்ஸ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ்,  பூண்டு, மேராக்காய், பட்டாணி உள்ளிட்ட பல்வேறு மலைத் தோட்டக் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
தற்போது பீன்ஸ் பயிரை மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் உள்ள மொத்த விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் ஒரு கிலோவுக்கு ரூ. 15 முதல் ரூ. 25 வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர். 
இதனால் பீன்ஸ் பயிரிடச் செய்த இடுபொருள் செலவுகூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அறுவடை செய்த பீன்ஸை அவர்கள் மார்க்கெட்டுக்குக் கொண்டு செல்லாமல் குப்பையில் கொட்டுகின்றனர்.
வெளிச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனையாகிறது. விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு காய்களை மொத்த விற்பனையாளர்கள் வாங்குவதால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பீன்ஸ் பயிரை குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.