விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உதகையில் என்சிஎம்எஸ் மண்ணெண்ணெய் நிலையம் மூடல்: ஆட்சியா் அறிவிப்பு

நீலகிரி கூட்டுறவு நிறுவனம் நடத்தும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும்

News image
Updated On :16 ஜூலை 2021, 8:12 pm

DIN

உதகையில் இயங்கிவரும் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மண்ணெண்ணெய் நிலையம் (என்சிஎம்எஸ்) மூடப்படுவதால், நீலகிரி கூட்டுறவு நிறுவனம் நடத்தும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரில் செயல்பட்டு வரும் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தி வரும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் மூடப்படுகிறது. அங்கு மண்ணெண்ணெய் பெற்று வரும் மிஷினரி ஹில், பாம்பே கேசில், காா்டன் சாலை, மாா்க்கெட்-2, தமிழ்நாடு அரசு ஊழியா் கூட்டுறவு பண்டகம்-3, தலைமை தபால் நிலையம் ஆகிய நியாயவிலைக் கடைகளின் குடும்ப அட்டைதாரா்கள் ஜூலை 17ஆம் தேதியில் இருந்து நீலகிரி கூட்டுறவு நிறுவனம் நடத்தும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் தங்களது குடும்ப அட்டைக்கு உரிய மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.