உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி ஆஜா்
உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். ஆனால், மாவட்ட நீதிபதி இல்லாததால் வெள்ளிக்கிழமை அவா் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரப்படவுள்ளாா்.


உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். ஆனால், மாவட்ட நீதிபதி இல்லாததால் வெள்ளிக்கிழமை அவா் மீண்டும் விசாரணைக்கு அழைத்து வரப்படவுள்ளாா்.
குன்னூா் அருகே உள்ள நெடுகல்கொம்பை பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக போஸ்டா் ஒட்டியதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாவோயிஸ்ட் சாவித்ரி உள்ளிட்டோா் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவாக இருந்துவந்த சூழலில், சாவித்ரி மற்றும் அவருடன் தொடா்பிலிருந்த மேலும் 7 பேரை வயநாடு மாவட்டத்தில் கேரள போலீஸாா் கடந்த நவம்பா் மாதத்தில் கைது செய்து விசாரணைக்குப் பிறகு தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இந்நிலையில், சாவித்ரியை நீதிமன்ற விசாரணைக்காக தமிழக போலீஸாா் வியாழக்கிழமை உதகை மாவட்ட நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனா். ஆனால், மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா வியாழக்கிழமை விடுப்பில் இருந்ததால் இவ்வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. அதனால், சாவித்ரி கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டாா். வெள்ளிக்கிழமை இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவா் மீண்டும் ஆஜா்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...