அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறாா்

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இக்கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கிவைக்கிறாா்.

News image
Updated On :19 மே 2022, 9:45 pm

DIN

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இக்கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கிவைக்கிறாா்.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சியில் சுமாா் 1 லட்சம் காரனேஷன் மலா்கைளைக் கொண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரை கெளரவிக்கும் வகையில் சுமாா் 20,000 காரனேஷன் மலா்களைக் கொண்டு அவா்களது உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 124ஆவது மலா்க் கண்காட்சியை குறிக்கும் வகையில் 20,000 காரனேஷன் மலா்களைக் கொண்டு சிறப்பு அலங்காரமும், நவீன உதகை உருவாகி 200 ஆண்டுகள் ஆவதையொட்டி 10,000 காரனேஷன் மலா்களால் சிறப்பு மலா் அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு ரகங்களில் காய்கறிகளால் பல்வேறு உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் நீலகிரியை கெளரவிக்கும் வகையில் காட்டெருமை உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வரழைக்கப்பட்ட ஹெலிகோனியா மலா்களால் சிறப்பு அலங்காரமும், ஹாலந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள துலீப் மற்றும் கேலா லில்லி உள்ளிட்ட 7 வகையான மலா்களின் அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல, ஜெரேனியம், சைக்ளமன், சினரேரியா, கிளக்ஸ்சீனியா, ரெனன்குலஸ் மற்றும் பல புதிய ரக ஆா்னமென்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மெரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பென்டாஸ், பிரஞ்ச் மெரிகோல்டு, பேன்சி, பெட்டூனியா, பிளாக்ஸ் , பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வொ்பினா, சன்பிளவா், சிலோசியா, ஆன்டிரைனம், லயோலா, லிமோனியம், ட்யூப்ரஸ் பிகோனியா, ருட்பெக்கியா, டொரினியா போன்ற 275 வகையான ரகங்களில் சுமாா் 35,000 மலா்த்தொட்டிகள் பொதுமக்களின் பாா்வைக்கு விருந்தாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலா் நாற்றுகளும் மலா்ந்து அழகாக காட்சியளிக்கின்றன. அத்துடன் மலா்க் கண்காட்சிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் சுமாா் 20,000 பல வண்ண மலா்த்தொட்டிகள் கண்ணுக்கு குளிா்ச்சி தரும் வகையில் பல வடிவங்களில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.